பூட்டிய அறைக்குள் 2 அழகிய பெண்களின் சடலங்கள்! திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கனடாவில் வீட்டில் இரண்டு மாணவர்கள் சடலமாக கிடந்த அதில் ஒருவர் இந்திய மாணவி என அடையாளம் காணப்பட்டு பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.


கனடாவின் உள்ள சர்ரே பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் இரண்டு பேர் சடலமாக கிடந்தனர். அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இருவரும் யார் என்ற தகவல் தெரியாமல் இருந்தது.  

இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் அதில் ஒருவர் இந்திய மாணவி என உறுதி செய்தனர். இதனை அடுத்து இந்தியாவிலிருந்த பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. 

இது குறித்து பேட்டியளித்த இந்திய மாணவியின் பெற்றோர், நேற்று காலை கனடாவிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அதில் கனடா போலீஸ் பேசுவதாக குறிப்பிட்டனர். மேலும் எங்களுக்கு ஒரு சோகமான செய்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அதாவது உங்களது மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து தொலைபேசியை துண்டித்தனர். எங்களுக்கு வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறினார். 

இதனை அடுத்து, இந்திய மாணவியின் உண்மையான நிலையை அறிவதற்காக அவரது பெற்றோர் பெற்றோர் உடனடியாக கனடாவுக்கு செல்ல வருகின்றனர். 

உயிரிழந்த இந்திய மாணவி பிரப்லின் 2016 ஆம் ஆண்டு முதல் கனடாவில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.