17 வயது சிறுவன் 21 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவமானது சென்னை எண்ணூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக வந்த 21 வயது பெண்..! வாயை பொத்தி தரதரவென இழுத்துச் சென்று 17 வயது சிறுவன் செய்த நினைத்து பார்க்க முடியாத செயல்! சென்னை அதிர்ச்சி!
சென்னை எண்ணூரில் பெரியகுப்பம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்னால் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் அவரது பின்பக்கத்திலிருந்து பெண்ணின் வாயை மூடியுள்ளார்.
பின்னர் அந்த இளம்பெண்ணை ரயில்வே இருப்புப்பாதை வழியாக தரதரவென இழுத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியின் வாயில் இருந்து இளைஞர் கையை எடுத்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் கூச்சலிட்டதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது அந்த இளைஞர் பயந்துகொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பெண்ணின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது எணாணூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.