திருப்பதியில் லிஃப்ட் கேட்டு இளைஞனுடன் பைக்கில் ஏறிய 16 வயது இளம் பெண்! பெட்ரோல் தீர்ந்த பிறகு அரங்கேறிய திக் திடுக் சம்பவம்!

திருப்பதி: 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பதி அருகே உள்ள திருச்சானுர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. இவர், கடந்த நவம்பர் 24ம்தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கடேஷ் என்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார். திருச்சானுர் செல்வதாகக் கூறிய வெங்கடேஷ் திடீரென முன்ட்லாபுடி பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது நண்பர் ராஜமோகனை அழைத்திருக்கிறார்.

அவர்கள் 2 பேரும் சேர்ந்து, சாலையோரம் உள்ள முட்புதரில் சிறுமியை கீழே தள்ளி, பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதன்பேரில் சிறுமி தனது பெற்றோருக்கு தகவல் கூற, அவர்கள் போலீசார் உதவியுடன் சிறுமியை மீட்டனர்.  

இதன்பேரில் உரிய அங்க அடையாளங்களை வைத்து, குறிப்பிட்ட 2 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.