நான் காதலிச்ச பையன், அப்புறம் ரெண்டு பசங்க..! புதருக்குள் இருந்து கதறிய 16 வயது இளம் பெண்! திருச்சி திகுதிகு!

திருச்சி: காதலனை நம்பிச் சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி ஈபி சாலையில் அமைந்துள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப். 21 வயதான இவர், கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி கீர்த்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். சிறுமியின் தாய் உடல்நலக் குறைவால், அவரது தங்கையின் வீட்டில் தங்கி, சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த ஞாயிறன்று, சித்தி வீட்டில் உள்ள தனது தாயை பார்ப்பதற்கு, அந்த சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த காதலன் பிரதீப், சித்தி வீட்டில் பைக்கில் கொண்டு சென்றுவிடுவதாகக் கூறியிருக்கிறார்.  

இதனை நம்பி பிரதீப்புடன் சிறுமி சென்றுள்ளார். ஆனால், வேதாத்திரி நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத காலி மனைப்பகுதி ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பிரதீப், அங்கு தனது நண்பர்கள் 2 பேரை வரவழைத்துள்ளார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து, சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.

இதன்போது வலி தாங்காமல் சிறுமி அலறியதால், அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பெண் வழக்கறிஞர் ஒருவர் ஓடிவந்துள்ளார். அவர் வரும் முன்பாக, அந்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டனர். இதன்பேரில், சிறுமியை மீட்ட பெண் வழக்கறிஞர், போலீசில் புகார் தர, அவர்களோ போதிய பாதுகாப்பு காவலர்கள் இல்லை எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீஸ் அவசர தொடர்பு எண்ணிற்கும், சிறுமியின் பெற்றோருக்கும் அவர் தகவல் தெரிவித்தார்.  

நீண்ட நேர காத்திருப்புக்குப் பின், அங்கு வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தி, குற்றம் நடந்ததை உறுதி செய்தனர். பிறகு, பிரதீப்பை கைது செய்தனர்.