திருமண ஆசைக்காட்டி பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்! 17 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது காமுகன்!
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய வயது 32. இவருடைய வீட்டிற்கு அருகே இளம்பெண் ஒருவர் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.
அவர் மீது இவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தனிமையிலிருந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த சுரேஷ் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இதனை நம்பிய அந்த இளம்பெண் பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
நேற்று அந்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. பயந்துப்போன அவருடைய பெற்றோர் புதுவை கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
பெற்றோர் விசாரித்த போது, அந்த இளம்பெண் நிகழந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.