15 வயது சிறுமியை கடத்தி அண்ணன் - தம்பி இணைந்து பாலியல் வல்லுறவு! பிறகு நடந்த தரமான சம்பவம்!

15 வயது சிறுமியை ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பாலியல் செய்த குற்றத்திற்காக சகோதரர் இருவர் உட்பட 5 பேருக்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிபதி அதிரடி உத்தரவு


சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை கடத்திச்சென்று கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக சிவகங்கையைச் சேர்ந்த சகோதரர்களான பர்மா பாண்டி மற்றும் செல்வம் அவருடைய நண்பர்கள் பிரபாகரன், சுலைமான், சிரஞ்சீவி ஆகிய 5 பேரை சிவகங்கை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்,

இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன் முன் குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளான சகோதரர்கள் பர்மா பாண்டியன் மற்றும் செல்வா இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றத்திற்கு உதவி செய்த நண்பர்களான பிரபாகரன் மற்றும் சுலைமானுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஐந்தாவது குற்றவாளியான சிரஞ்சீவிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து மதுரை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.