பெற்ற மகளை 3 ஆண்களுடன் அனுப்பி வைத்த தாய்..! ஆதாரத்தை வெளியிட்டு கதறும் தந்தை! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

பாவ்நகர்: பெற்ற மகளையே ஆள் வைத்து பலாத்காரம் செய்ததாக மனைவி மீது கணவன் புகார் அளித்துள்ளார்.


குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பூட்டியா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி தாண்டுகியா (46 வயது). இவரது மகளுக்கு 12  வயதாகிறது. இந்நிலையில், சாந்தி, பணத்திற்கு ஆசைப்பட்டு, கடந்த ஓராண்டாக, உள்ளூரை சேர்ந்த பாபுபாய் (43 வயது), சர்தான்பரா (32 வயது) ஆகியோரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

முதலில், தனது கணவருக்கு உணவில் பேதி மருந்து கலந்து கொடுத்துவிடுவாராம். அவரை வெளியில் அனுப்பிவிட்டு, பாபுபாய், சந்திரேஷ் ஆகியோரை வீட்டின் உள்ளே விட்டு, தனது மகளுடன் சேர்த்து பூட்டிவிடுவாராம். இரவு முழுக்க அவர்கள் 2 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்வார்களாம். இப்படியே ஓராண்டாக குற்றம் நடைபெற்ற நிலையில், இதுபற்றி ஒருநாள் உண்மை தெரியவந்த சாந்தியின் கணவர், போலீசில் புகார் செய்தார்.  

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார், அவரது மனைவி சாந்தி, மற்றும் பாபுபாய், சந்திரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.