குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னே, 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் முன்னிலையில் 12வயது தலித் சிறுமியுடன் 6 பேர் மாறி மாறி வல்லுறவு! அதிர வைத்த சம்பவம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடைபெறுவதற்குச் சில மணிநேரம் முன்பாக, அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும், அண்டை வீட்டாருக்கும் இடையே கழிவுநீர்க்கால்வாய் அமைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அண்டை வீட்டார் 6 பேர் ஒன்றுசேர்ந்து, சிறுமியை அவரது குடும்பத்தினரின் முன்னிலையிலேயே தரதரவென இழுத்துச் சென்று கூட்டாகப் பலாத்காரம் செய்தனர். இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் குடும்பத்தினரையும் அடித்து உதைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை நடந்ததுதொடர்பாக மருத்துவ பரிசோதனை நடைபெறுவதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டது தலித் சிறுமி என்பதால் அப்பகுதி முழுவதும்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.