10 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்! டாக்டர்களே மிரண்ட சம்பவம்!

10 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மகராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனும் சிறுமியும் அண்டை வீடுகளில் வசிப்பவர்கள். இந்நிலையில் அந்த சிறுவன் கடந்த 4 மாதங்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அந்தச் சிறுமி வயிற்று  வலியால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமி கருவுற்றிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமி நடந்ததைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தச் சிறுவன் மீது போலீசார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவன் மீது போலீசார்  பாலியல் பலாத்காரம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் சிறுவன் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பத்து வயது சிறுமியை 12 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய தகவலால் மருத்துவர்களேமிரண்டு போயுள்ளனர். மேலும் செல்போனில் ஆபாச படம் பார்த்து சிறுவனும் சிறுமியும் பாலியல் உறவு வைத்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலிசார் விரைவில் அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்கக் உள்ளனர்.