சாக்லேட் வாங்கித் தருகிறேன் வா! பாலியல் அத்து மீறிய தாத்தாவுக்கு சிறுமி கொடுத்த செம ஷாக் ட்ரீட்மென்ட்!

புதுச்சேரியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


புதுச்சேரி சாரம் பகுதியில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை அப்பகுதியில் வசித்து வந்த வடமாநில முதியவர் ஒருவர், அணுகியுள்ளார். தாத்தா உனக்கு சாக்லெட் வாங்கித்தருகிறேன் என்னுடன் வா என்று அழைத்துள்ளார்.

சாக்லேட் கிடைக்கும் என்கிற ஆசையில் அந்த சிறுமி அந்த முதியவருடன் சென்றுள்ளார். ஆனால் சாக்லேட் தருவதாக கூறிவிட்டு சிறுமியின் உடல்களை சீண்டியுள்ளார் முதியவர்.

அவர் பாலியல் வன்செயலில் ஈடுபடவும் முயன்றுள்ளார்.  ஆனால் அந்த 10 வயது சிறுமி சுதாரித்து  கொண்டு முதியவரின்  கையை கடித்துவிட்டு தப்பிவந்துள்ளார்.  இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து, அந்த முதியவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதையடுத்து விசாரணையில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.