ஃபாத்திமா மரணத்தில் விடை இல்லாத 10 கேள்விகள்! கண்டுகொள்ளுமா காவல் துறை?

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்துகொண்ட பாத்திமா லத்தீஃப்பின் விவகாரம் நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது.


ஆனால், இன்னமும் ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் தவிர வேறு யாரையும் காவல் துறை விசாரிக்கவே இல்லை. இந்த நிலையில் ஃபாத்திமா மரணம் குறித்து அவரது தந்தை முன்வைக்கும் 10 கேள்விகள் இவைதான். இவற்றுக்குப் பதில் தருமா போலீஸ்? 

1.எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?

2.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் சி.சி.டி.வி. பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?

3. என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எப்படி கிடைத்தது.

4. மரணிப்பதற்கு முன்பான இரவில் உணவகத்தில் வைத்து 1மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணிவி.? 1மணி அழுகிறாள் எனில் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்.

5. மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறையில் வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கிடந்த்து.

6.எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு சென்று விட்டார்

7. தினமும் இரவு 8மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள் சம்பவம் நடந்த அன்று 9மணிக்கு உணவகத்தில் வைத்து அழுதிருக்கிறாள் எனில் அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.?

8. எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள் பாத்திமா சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன நடந்தது..?

9.சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா அழுது கொண்டிருக்கிறோம் போது 9:30வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில் தான் இருந்திக்கிறார்.

10. எனது மகள் மரணத்து இதுவரை ஐஐடி யின் அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐஐடி யின் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது ஏன்..? என்று கேள்விகள் எழுப்பியிருக்கிறார். இந்தப் பதிலில்தான் உண்மைகள் அடங்கியிருக்கிறது.